Ad Widget

வீட்டுக் கிணற்றில் கைக்குண்டுகள்!

யாழ்.பொம்மைவெளி பகுதியில் 6 கைகுண்டுகள் இணங்காணப்பட்டுள்ளதாகவும், குறித்த குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வீடொன்றில் கிணற்றை வீட்டு உரிமையாளர் இன்று வியாழக்கிழமை துப்பரவு செய்துள்ளார்.

இதன்போது கிணற்றில் 6 கைக் குண்டுகள் இருப்பதைக் காண்டு ஊடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியபோது பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று கைக் குண்டுகளை பார்வையிட்டுள்ளனர்.

அதில் 03 பழைய குண்டுகள் மற்றும் 03 புதிய குண்டுகள் இருப்பதாகவும், அக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts