Ad Widget

விவசாய காணிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் – மாவை

இராணுவம் பயன்படுத்திவரும் விவசாய நிலங்களை, மக்களுக்கு பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தில் அமைக்கப்பட்ட நெல்லியடி மரக்கறிச் சந்தையை செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

எங்களுடைய விவசாய நிலத்தில் இராணுவத்தினர் உற்பத்தியை மேற்கொண்டு குறைந்த விலையில் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றார்கள்.

இதனை முறியடித்து விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கு வழங்குவதற்கான முயற்சியை இதுவரை காலமும் மேற்கொண்டோம்.

ஆனால் அது பயனளிக்கவில்லை. கடந்த காலங்களைவிட இந்த வருடம் அமைதியான சூழல் காணப்படுகின்றது. இதனை பயன்படுத்தி எங்களுடைய மக்களின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காண்பதனுடன் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்’ என்றார்.

Related Posts