உலகிலே பெருமளவான நாடுகளில் வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு இ-மோட்டர் முறை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
விரைவில் இ-மோட்டர் முறை சிறீலங்காவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறீ பால டி சில்வா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் மோட்டார் வாகன திணைக்களம் ஒன்றின் அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வீட்டிலிருந்தவாறே வாகன அனுமதிப்பத்திரத்தினை தொலைபேசிமூலம் பணத்தினைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இச்செயற்பாடே இ-மோட்டர் என அழைக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.