Ad Widget

விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு, பெண் ஒருவர் பலி!

pakistan-karachi-airportபாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பெண் பயணி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்றிரவு 178 பயணிகளுடன் சவூதி அரேபியாவில் இருந்து வந்த விமானம் பெஷாவர் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விமானம் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

விமானத்தை குறிவைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதோடு, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Posts