Ad Widget

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இருபாலைச் சந்தியில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர், நேற்று வியாழக்கிழமை (13) உயிரிழந்தார்.

கோப்பாய் தெற்கைச் சேர்ந்த நல்லலிங்கம் சுஜிந்தம் (வயது 30) என்பவரே உயிரிழந்தார்.

வீதியைக் கடப்பதற்காகத் தயாராக நின்ற இவரை, வேகமாக வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த இந்நபர், அதே காரில் கொண்டு செல்லப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

Related Posts