Ad Widget

விபத்தில் தம்பதிகள் பலி!! குழந்தை படுகாயம்!!

கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற மினிபஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஏ-9 வீதியில் கொக்காவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியாவைச் சேர்ந்த அல்பேட் ஜெயக்குமார் (வயது 24) அவரது மனைவியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரஷாந்தினி (வயது 23) ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் ஒன்றைரை வயதுக் குழந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த மினிபஸ்ஸும் நேருக்கு நேர் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது.

சாரதி தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts