Ad Widget

விபத்தில் ஒருவர் படுகாயம்

பொலிகண்டி ஆலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 40 வயது நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் திங்கட்கிழமை (01) தெரிவித்தனர்.

பருத்தித்துறையைச் சேர்ந்;த பொன்னராசன் குணசீலன் (வயது 40) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்தபோது கன்டர் ரக வாகனமொன்று இவரை மோதியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கன்டர் ரக வாகனத்தின் சாரதியை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts