Ad Widget

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், இளம் குடும்பஸ்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் உத்தியோகத்தரான கோரக்கன்கட்டு முரசுமோட்டையைச் சேர்ந்த இந்திரராஜா சுதர்சன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை மாலை (25) முரசுமோட்டையிலிருந்து பரந்தன் சந்திக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த குடும்பஸ்தரை, எதிரே வெளிச்சம் இன்றி வந்த உழவு இயந்திரம் மோதி விட்டு தப்பிச்சென்றுள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த குறித்த நபர், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளிநொச்சிப் பொலிஸார் விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தை கைது செய்வதற்கான நடவடிக்களை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts