யாழ்ப்பாணம், முதிரைச் சந்தியில் வானொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூரைச் சேர்ந்த வி.கே.கணேசலிங்கம் (வயது 63) என்பவரே படுகாயமடைந்தார்.
இதேவேளை, யாழ்.சாவகச்சேரி பகுதியில் வீதியைக் கடந்த வயோதிபரை கன்ரர் ரக வாகனம் மோதியதில் கொழும்புத்துறையைச் சேர்ந்த க.யோகராஜா (வயது 59) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (26) காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.