Ad Widget

விபத்தில் இருவர் படுகாயம்

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருவது,

சீமெந்து ஏற்றிய நிலையில் வீதியில் தரித்து நின்றிருந்த பாரவூர்தி மீது பேருந்து மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பேருந்தின் சாரதியும், நடத்துநரும் இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சாரதி நித்திரை தூக்கத்தில் இருந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

Related Posts