Ad Widget

விடுவிக்கப்பட்ட காணியில் இருந்து வெடி பொருட்கள் மீட்பு

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் விடுவிக்கப்பட்ட காணியில் இருந்த வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

மிதிவெடிகள் இரண்டும் எறிகனை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மழைகாலம் என்பதால் நீர் நிரம்பி இருக்கும் இடங்களை துப்பரவு செய்யும் போது இவை மீட்கப்பட்டுள்ளன.

பொஸிஸ் விசேட பிரிவினருக்கு பொது மக்கள் வழங்கிய தகவலை அடுத்து மீட்கப்பட்ட இவை, பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டதாக தெல்லிப்பளை பொஸிசார் தெரிவித்தனர்.

தையிட்டி கிழக்கில் இராணுவத்தால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள காவலரணிற்கு அருகிலேயே இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts