Ad Widget

விடுதலைப்புலிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை: – தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு!

விடுதலைப்புலிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் அறிவித்து உள்ளார்.

Sumanthiran MP

இது தொடர்பாக இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சுமந்திரன் கூறும்போது,

எங்களுக்கு விடுதலைப்புலிகளுடனோ, அவர்களது கொள்கைகளுடனோ எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறோம். ஆனால், நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதும் இல்லை, ஊக்குவிப்பதும் இல்லை. இது அனைவருக்கும் தெரியும்.

விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும் என்ற வருத்தம் யாருக்கும் தேவையில்லை. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த சில கட்சிகள் செய்யும் முயற்சி. ஆனாலும், அப்படி ஒரு நடவடிக்கை இருந்தாலும், அதனை மக்கள் அனுமதிக்கவும், ஆதரிக்கவும் மாட்டார்கள்” என்றார்.

Related Posts