Ad Widget

விக்னேஸ்வரனிற்கு ஆதரவளிக்க தயார்: கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள கட்சிகளின் கொள்கைகளுடன் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒன்றித்து செயற்பட்டால் அடுத்த தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘இவ்வாறு புதிய அமைப்பைத் தொடங்கவுள்ள முதலமைச்சர் கொள்கைகளில் உறுதியாகவுள்ள அதாவது கொள்கைகள் உள்ள கட்சிகளுடன் இணைந்து செயற்படவேண்டும்.

அந்தவகையில் தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பொது அமைப்புக்களை அரவணைத்துச் செயற்படுவதாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து செயற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம்.

முதலமைச்சர் புதிதாக அமைப்பொன்றினை உருவாக்கிச் செயற்படுவதாக இருந்தால் அவர் எந்தத் தரப்பினருடன் இணைந்து கொள்ளப் போகின்றார் என்பது மிக முக்கியமான விடயமாகும்.

எனவே அவர் எதிர்காலத்தில் யாருடன் இணைந்து செயற்படப்போவதாக இருந்தாலும் தமிழ் மக்களது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான நிலைப்பாட்டில் உறுதியுடன் செயற்படவேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts