வாழ்வின் எழுச்சி வாழ்வாதார மற்றும் நிவாரண கடன் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகர் மேற்கு, பண்ணை பகுதியில் சமுர்திக் கிளையில் சமுர்த்திச் சங்கத் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பலர் பங்குகொண்டனர்.