வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை இல்லாது செய்ய முயற்சிக்கிறார்கள்

பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைய வேண்டும் என்பது தொடர்பில் நடாத்திய வாக்கெடுப்பானது, மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதாக இருக்க முடியாது என வடமாகாண சபையின் எதிர்கட்சியின் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

யாழ் யூரோவில் மண்டபத்தில் நடைபெற்ற வடமாகாண மக்கள் செயற்றிட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைப்பது என்பது தொடர்பில் நடத்திய வாக்கெடுப்பு படி ஓமந்தையில் அது அமைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே வடமாகாண சபையின் எதிர்கட்சியின் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது மத்திய அரசாங்கத்தின் பணம். இதற்காக வரையரையினை தழிழ் தேசியக்கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் போடகூடாது என அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வர இருந்த இரணைமடு நீர் விநியோகத் திட்டத்தை எவ்வாறு இல்லாமல் ஆக்குவது என்பது பற்றி சிந்தித்தார்களோ, அதேபோல இந்த பொருளாதார மையம் தொடர்பிலும் செயற்படுவதாக வடமாகாண சபையின் எதிர்கட்சியின் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

இது தழிழ் தேசிய கூட்டமைப்பின் இன்னுமொரு வடிவமாக காணப்படுகின்றது. எங்களுக்கு கிடைக்க வேண்டியது தான் எங்களுக்கு முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூவினங்களையும் சேர்ந்த வியாபாரிகள் வவுனியா நகரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts