Ad Widget

வவுனியாவில் மாதா சிலை எரிப்பு! : பிரதேசத்தில் பதற்றம்

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாதா சிலை விசமிகளால் உடைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்கிளாங்குளம் பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக காணப்படும் வேளாங்கன்னி மாதா சிலை, அப்பகுதி கிறிஸ்தவ மக்களின் வணக்கஸ்தலமாகவும் காணப்படுகிறது.

இந்நிலையில், சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூட்டை உடைத்து, நேற்றிரவு சில விசாமிகள் அதற்கு எரியூட்டிச் சென்றுள்ளனர். அத்தோடு, கண்ணாடிக் கூட்டுக்கு வெளியில் காணப்பட்ட சிறிய சிலையொன்றும் எரியூட்டப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் அமைதியை சீர்குலைத்து, இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் இச் செயலை விசமிகள் செய்திருக்கலாம் என கருதும் பிரதேச மக்கள், பண்டாரிக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அதன் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts