Ad Widget

வல்லிபுர தர்மகர்த்தா சபை உறுப்பினர் மீது கொலை முயற்சி

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவில் தர்மகர்த்தா சபை உறுப்பினர் ஒருவர் நேற்று தன்னை இனந்தெரியாதோர் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கற்கோவளத்தைச் சேர்ந்த சதானந்தன் கேசவானந்தன் (67 வயது) என்பவர் மீதே நேற்று மாலை 4 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஆலய தர்மகர்த்தா சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர், பருத்தித்துறை, மருதங்கேணி வீதியினூடாக தனது வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று தாக்குதலை நடத்தியதுடன், வாள்களால் வெட்ட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வீதியால் வந்திருந்த அரச பேருந்து பயணிகளால் அவர் காப்பாற்றப்பட்ட உறுப்பினர் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Related Posts