Ad Widget

வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

வலி.வடக்கு பிரதேசப் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்று (17) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கீரிமலை ஜே/226, காங்கேசன்துறை மேற்கு, ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை, படையினருக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த எதிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் காணி அளவீடு நடவடிக்கையை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

Related Posts