சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் வன்னி இணைப்பு செயலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலகத்தை சுகாதார போஷாக்கு சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளும் வழங்கப்பட்டன.
வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார மேலதிக அரச அதிபர் திரேஸ் குமார் உள்ளிடட் பலர்; இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.