Ad Widget

வட மாகாணத்தில் ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்!

வடக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினால் இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. பிரஜைகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட கருத்திற்கு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Posts