வட்டுக்கோட்டை சங்கரத்தைச் சந்தியில் சற்றுமுன்னர் நடந்த வாகன விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையிலுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
சித்தன்கேணியிலிருந்து வட்டுக்கோட்டைச்சந்தியை நோக்கி பள்சர் ரக உந்துருளியில் அதிவேகமாக சென்றவரும் நவாலியிலிருந்து இவ்வீதியைச் சந்திக்கும் பிரதான வீதியூடாக சந்தியைக் கடக்க முற்பட்டவருமே மிக மோசமான முறையில் மோதுண்டு விபத்துக்குள்ளாயினர்.
இவர்களில் பள்சர் ரக உந்துருளியில் அதிவேகமாக வந்து மோதியவரின் நிலையே மிகவும் கவலைக்கிடமாயுள்ளது. அவ்வழியால் வாகனங்களில் உயரதிகாரிகளோடு வந்த படையினரே உடனடியாகச் செயற்பட்டு இருவரையும் வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.