Ad Widget

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராகவும் முறையிட முஸ்தீபு

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் உணவு வழங்கலும் விநியோகமும் சுற்றாடலும் கூட்டுறவும் அமைச்சர் பி. ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக, முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர்களே, நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

வடமாகாண விவசாய அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல சம்பவங்கள் தொடர்பில், விவசாய அமைச்சருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அக்குற்றச்சாட்டுகளிலிருந்து அமைச்சரை காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் முயன்றமையால், இவ்விவகாரம் தொடர்பில் முறையிடவுள்ளதாக அந்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Posts