Ad Widget

வடமாகாண சபை உறுப்பினர்களின் கதவடைப்பு போராட்டம் முடிவு! சபை ஒத்திவைப்பு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்படாமைக்கு கண்டனம் தெரிவித்து வடமாகாண சபையில் உறுப்பினர்கள் சபா மண்டபத்தை மூடி மாகாணசபை உறுப்பினர்கள் மேற்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மாகாணசபை அமர்வுகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

protest_npc_north

மாகாண சபையின் 31 வது அமர்வு இன்றைய தினம் நடைபெறவிருந்த நிலையில் மாகாணசபை உறுப்பினரை அவமரியாதை செய்த அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலை 9 மணியளவில் சபா மண்டபத்திற்கு முன்பாக கூடிய மாகாணசபை ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுகளை நடத்த விடாமல் தடுத்தனர்.

இந்நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் கட்சி தலைவர்களுடனான தொலைபேசி உரையாடலின் பின்னர் காலை 11.30 மணியளவில் சபையை கூடி பின்னர் குறித்த அரசாங்க அதிபர் இடமாற்றம் தொடர்பான பேச்சுக்களை பதிவு செய்த பின்னர் சபை ஒத்திவைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபையில் தற்போது கருத்து பதிவு இடம்பெறுவதுடன் சபை ஒத்திவைக்கப்படவுள்ளது.

Related Posts