Ad Widget

வடமாகாண சபையின் வரவு – செலவு திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டின் வரவு – செலவு திட்டத்திற்கான அங்கீகாரம் ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

CVK-Sivaganam

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு அனைத்து துறைகளுக்கும் தேவையாக பாதீடுகள் செய்யப்பட்டு 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.

கடந்த 17, 18, 19 ஆம் திகதிகளில் கைதடியில் உள்ள வடமாகாண சபையின் பேரவையில் நடைபெற்ற வரவு – செலவு திட்டம் மீதாக விவாதங்களை அடுத்து நிறைவேற்றப்பட்டிருந்தது. இவ்வாறு நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் ஆளுநருக்காக நிதி மற்றும் வெலிஓயா பகுதிகளுக்கான நிதி பரிசீலணைக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நிறைவேற்றப்பட்ட வரவு – செலவு திட்டம் வடமகாண ஆளுநரின் அங்கிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இது தொடர்பில் ஆராய்ந்த வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வரவு – செலவுத்திட்டத்திற்கான அங்கீகாரத்தினை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வரவு – செலவு திட்டத்திற்கான அங்கீகாரத்தினை அடுத்து பணிகள் மும்முரப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts