Ad Widget

வடமாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பு இணையமாக பெயர் மாற்றம்

வடமாகாண கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பானது வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் என்று பெயர் மாற்றம் பெற்று எதிர்காலத்தில் இயங்குமென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அன்டனி ஜேசுதாசன் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

DSCF2860

தற்போது பெயர் மாற்றம் பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தில் இன்று மதியம் 2.00 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜேசுதாசன் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘வடமாகாண கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பின் மகாசபை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதன்போது, கூட்டமைப்பு என்ற பெயரை இணையமாக மாற்ற வேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கமைய இன்று முதல் வடமாகாண கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பு வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையமாக செயற்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts