நாட்டின் மூன்று மாகாணங்களுக்கு டெங்கு நோய் குறித்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு தடுப்புப் பிரிவினால் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் வட மாகாணம் ஆகியவற்றுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.