Ad Widget

வடமாகாணத்தில் வாள்வெட்டு மற்றும் வன்முறை குழுக்களுக்கு முடிவுரை எழுதப்படும்! – வடக்கு ஆளுநர்

வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவேன். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

என்னுடைய பதவிக்காலத்தில் வடமாகாணத்தில் வாள்வெட்டு மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு இடமளிக்கப்போவதில்லை.

வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கை அத்தனையும் எடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Related Posts