Ad Widget

வடமராட்சி மீனவர்கள் ஐவர் இந்தியக் கடற்படையால் கைது

jail-arrest-crimeவடமராட்சி வடக்கு இன்பருட்டியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே இடத்தைச் சேர்ந்த காளியன் நடராஜா (48 வயது) வேலுப்பிள்ளை சிவராஜலிங்கம் (38 வயது) இளங்கொடி கார்த்திக் (38 வயது) முத்துலிங்கம் ஜெயசீலன் (26வயது) குணசீலராஜா இளையராஜா (28 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரவு வேளையில் கைதான 5 மீனவர்களும் தமிழகத்தில் உள்ள நாகபட்டினத்தில் இந்திய கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கும் கடற்றொழில் சங்கங்களுக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Related Posts