Ad Widget

வடமராட்சியில் கோரவிபத்து விபத்து 12 பேர் படுகாயம்

தனியார் பஸ் ஒன்றும் கன்டர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 12 காயமடைந்தது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பருத்தித்துறை கொற்றாவத்தைப் பகுதியைச் சேர்ந்த த.சுமனா (26) மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த எஸ்.தயாபரன் (42) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ai79

acc1

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸும் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த கன்டர் வாகனமும் வல்லைப்பகுதியில் நேருக்கு நேர் மோதி பத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Related Posts