Ad Widget

வடக்கு மாகாண முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி!

சுவாசக் கோளாறு காரணமாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுவாச நோய் காரணமாக பாதிக்கப்பட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுவாச நோய்க் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த காலங்களில் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்க் காரணமாக பல தடவை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிசை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts