சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புக்களை அடக்கும் செயல்களையே எப்போதும் அரசாங்கம் செய்கின்றது. வடக்கு மாகாண ஆளுநராக சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டதன் மூலம் இது மேலும் பிரதிபலிக்கின்றது.” இவ்வாறு தெரிவித்துள்ளார் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி.
வடக்கு மாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் சந்திரசிறி மீள நியமிக்கப்பட்டமை தொடர்பாகக் கருத்துவெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
வடக்கு மாகாண சபை பெரும்பான்மையான மக்களின் விருப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்று இராணுவப் பின்னணி கொண்ட வடக்கின் ஆளுநர் சந்திரசிறியை மாற்ற வேண்டும் என்பதே. ஆனால் இப்போது சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவடைந்தும் அவரை மீண்டும் ஆளுநராக நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது வடக்கில் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் செயற்பாடு – என்றார் அவர்.