Ad Widget

வடக்கு, கிழக்கு மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

வடக்கு, கிழக்குக் கடல் பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு அபாயம் நீடிப்பதால் மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாம் என திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் 300 கிலோமீற்றருக்கு அப்பால் மணிக்கு 300 கிலோமீற்றர் வேகத்தில் தாழமுக்கம் மையங்கொண்டுள்ளது.

இதனால் கடும் காற்று வீசுவதுடன் மிகக் கொந்தளிப்பான கடலும் காணப்படும். இதனாலேயே வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மீனவர்களை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Posts