Ad Widget

வடக்கு இ.போ.ச. பிரிப்பை நிறுத்தப் பிரதமர் உத்தரவு

வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ்., வன்னிப் பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்ட போதும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் வடக்கில் பூதாகரமாக மாறியிருந்த நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

அதையடுத்து இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தலைமையகத்துக்கு இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளார்.

அதனையடுத்து வடபிராந்திய பிரிப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும் அது தொடர்பில் நாளை மறுதினம் திங்கட்கிழமை நாடாளுமன்றில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுப்பது என்றும் ரணில் உறுதியளித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

Related Posts