Ad Widget

வடக்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜா புதனன்று கடமைகளைப் பொறுப்பேற்பார்!!

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ள ஜீவன் தியாகராஜா தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை துறந்துள்ளார்.

அவர் வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளை வரும் புதன்கிழமை பொறுப்பேற்பார் என அறிவுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்தப் பதவியிருந்து நீக்கப்பட்டு மற்றொரு பதவி வழங்க்கப்படவுள்ளது.

இந்த நிலையில் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.

அதனால் தற்போது வகிக்கும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

Related Posts