Ad Widget

வடக்கில் 22 பேருக்கு கோரோனா தொற்று; யாழ்.மாநகர வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த 14 பேர் அடையாளம்

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 27 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் மேலும் 29 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 320 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்டது. அவர்களில் 7 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 755 பேரின் மாதிரிகளநேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

22 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 57 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரில் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வணிக மற்றும் முகாமைத்துவ பீட மாணவன் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வவுனியாவைச் சேர்ந்தவர்.

மேலும் திருநெல்வேலி சந்தை தோற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடைய இருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு வந்த ஒருவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் நோய் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை இன்றைய பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதியில் பெறப்பட்ட 800இற்கு மேற்பட்டோரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு கொழும்பு முல்லேரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Related Posts