Ad Widget

வடக்கில் குளிரான காலநிலை!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் வறட்சியான காலநிலை நிலவும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை நிலவக்கூடும்.

நுவரெலியா மாவட்டத்தில் காலைவேளைகளில் உறைபனிநிலவக்கூடும். வடமேற்கு மாகாணங்களிலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 40 கிலோமீற்றர் வேகத்திற்கு மேல் காற்று வீசக்கூடும்.

நாட்டின் சில இடங்களில் காலை வேளைகளில் பனிமூட்டம்நிலவக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Posts