Ad Widget

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் நிதி உதவி!

வடமாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 90 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

வடக்கில் புதைக்கப்பட்டிருக்கும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு 190 மில்லியன் ரூபா நிதியை இலங்கைக்கு வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் முன்வந்தது.

இது தொடர்பிலான உடன்படிக்கையொன்று இலங்கைக்கான ஜப்பான் தூதுவருடன் அண்மையில் கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இதற்கமைய தற்போது முதல் கட்டமாக 90 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts