Ad Widget

வடக்கில் இராணுவ முகாம்கள் படிப்படியாக அகற்றப்படும்- ஆளுநர் ரெஜினோல்ட் குரே

வடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற உறுதிமொழியை வடமாகாணத்திற்காக புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கியுள்ளார்.

கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூஜை வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்படி உறுதிமொழியை வழங்கினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக 6 மாத காலங்களில் ஆய்வு செய்து தீர்க்கும்படி ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதை ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய வடமாகாணத்திற்கு திரும்பிய பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டு அது தொடர்பில் நடவடிக்கைகளை கையாளவுள்ளேன் – என்றார்.

Related Posts