வடக்கின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிந்தது. இதன்போது படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியினைச் சேர்ந்த இளைஞனே வடக்கின் போரில் இடம்பெற்ற வாள்வெட்டில் காயமடைந்தவராவர்.
குறித்த இளைஞனுக்கும் வேறு குழுவினருக்கும் இடையில் இன்று மதியம் இடம்பெற்ற வாய்தகராறே இந்த வாள் வெட்டுக்கு காரணம் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்