Ad Widget

ராணுவ சீருடையில் STF இலச்சினை! சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டவையா???

வவுனியா தேக்கவத்தை பகுதி வீதியில் ராணுவச்சீருடை மீட்கப்பட்டதையடுத்து, அப்பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) காலை பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த சீருடையில் விசேட அதிரடிப்படையினரின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்ற வவுனியா பொலிஸார், அவற்றை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இராணுவச்சீருடை மற்றும் விஷேட அதிரடிப்படையினரின் இலச்சினை என்பன சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts