இரத்தினபுரி, பஸ்தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து யுவதியொருவர் மீது தடியடி மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட், உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து யுவதி ஒருவரை பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தடியால் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி