Ad Widget

யாழ்.வணிகர் கழகத் தலைவர் மாகாண சபை உறுப்பினரானார்

வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

யாழ்.வணிகர் கழகத்தின் அலுவலகத்தில் சிரேஸ்ட சட்டத்தரணியும், சமாதான நீதவானுமாகிய வீ.ரீ.சிவலிங்கத்தின் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு இவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மாகாணசபையின் அங்கத்துவக் கட்சிகளுக்கான சுழற்சிமுறை ஆசனம் இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்படுகின்றது.

முதலில் இருந்த ரெலோ அமைப்பைச்சேர்ந்த மயூரனின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையிலேயே இ.ஜெயசேகரம் வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன், அ.பரஞ்சோதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts