Ad Widget

யாழ்.வடமராட்சியில் வாள் வெட்டு!- இருவர் படுகாயம்!

knife-bloodயாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் வல்லிபுரக் குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

நேற்று நடைபெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது

வடமராட்சி வல்லிபுரக் குறிச்சியில் நேற்று நடைபெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பத்தில் வல்லிபுரக் குறிச்சி, சிங்க நகர்ப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய துரைராஜா சத்தியமோகன், புலோலி தெற்கைச் சேர்ந்த 27 வயதுடைய செல்வராஜா ரமணன் ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரு தரப்பினருக்குடையில் நீண்டகாலமாக இருந்துவந்த பகைமை நேற்று திங்கட்கிழமை ஒரு தரப்பைச் சேர்ந்த சிறுவனை மறுதரப்பைச் சேர்ந்த ஒரு இளைஞன் தாக்கியதில் ஏற்பட்ட முரண்பாடே இச்சம்பவத்திற்கு காரணம் என அயலவர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் சிறுவனைத் தாக்கிய தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் தொழிலுக்கு சென்றவேளை வல்லிபுரக் குறிச்சி தாமரைக் குளத்தடிப் பகுதியில் மறைந்திருந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் வாள்வெட்டை மேற்கொண்டதாக தெரியவருகின்றது.

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts