Ad Widget

யாழ். ரயிலில் அடாவடி செய்த ஊழியர் கைது!

இலங்கை இரயில் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் நடவடிக்கை தொடர்பாக மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் யாழ். இரயில் நிலைய அதிபரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டமையை அடுத்து, குறித்த ஊழியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி ஊழியர் யாழ். ரயிலில் பயணித்த பெண்ணொருவருடன் தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் காணொளி உட்பட முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டமையை அடுத்தே இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts