Ad Widget

யாழ் யுவதி நோர்வேயில் சுட்டு கொலை!!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பல் மருத்துவரை நோர்வே வைத்தியசாலைக்கு அருகில் வைத்து சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் சனிக்கிழமை(06) நோர்வே பொலிஸார் அவரது முன்னாள் காதலனை கைது செய்துள்ளனர்.

30 வயதான பல் மருத்துவர் வரதராஜன் ராகவி, தனது முன்னாள் காதலரான நோர்வே நாட்டவரால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே பொலிஸில் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்நிலைமையையும் மீறி காரில் பலத்த காயமடைந்த யுவதியும் இளைஞனும் கடந்த முதலாம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

யுவதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார், காயமடைந்த இளைஞன் நோர்வே பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் பின்னர் சுயநினைவு திரும்பியதையடுத்து நோர்வே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அவர் யுவதியை சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டுக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல் வைத்தியராக இருந்த யுவதி பொலிஸாரிடம் கொடுத்த முறைப்பாடுகளின் பிரகாரம், இந்த வைத்தியரின் மரணம் கொலையே என நோர்வே பொலிஸார் தீர்ப்பளித்துள்ளனர்.

இதன்படி கைது செய்யப்பட்ட நோர்வே இளைஞரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நோர்வே பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் உயிரிழந்த வைத்தியரின் சடலம் நோர்வேயில் உள்ள அவரது உறவினர்கள் குழுவினால் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related Posts