Ad Widget

யாழ். முன்னாள் மாநகர சபை உறுப்பினருக்கு பிணை

judgement_court_pinaiயாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை யாழ். நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

யாழ். பிரதான வீதியிலுள்ள விருந்தினர் விடுதியில் யாழ். பிரதேச செயலர் மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர் ஆகியோர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஜோடி ஒன்றினை விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி பிடித்துள்ளனர்.

குறித்த விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தன் நேற்று யாழ். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட இவர் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன்போது ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் அனுமதித்துள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

யாழ். மாநகரசபை முன்னாள் உறுப்பினர் கைது

Related Posts