Ad Widget

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமனம்

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வரும் நிலையில் அவருக்கு எதிராக பொதுமக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பல முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்திற்குகிடைக்கப் பெற்றதையடுத்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளரான கீதநாத் காசிலிங்கம், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Posts