கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நாடாளுமஎன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இடைக்கால அரசில் விவசாய இராஜாங்க அமைச்சர் பதவியைக் கேட்டிருந்தார். எனினும் அவருக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தரப்புகள் கூறியிருந்தன.
எனினும் நேற்று 35 இராஜாங்க அமைச்சர்கள், 3 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கஜன் இராமநாதன், சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு பதவி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.