Ad Widget

யாழ்.மண்டைதீவுக் கடற்பரப்பில் மீனவர்கள் படுகொலையின் 27 ஆவது வருட நினைவு

gurunakar_mandaithevuயாழ்ப்பாணம் மண்டைதீவுக் கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 27ஆவது வருட நினைவுதினம் குருநகரில் நேற்று மிகவும் அமைதியான முறையில் நினைவு கூறப்பட்டது.

நேற்று காலை 6.00 மணிக்கு புனித யாகப்பர் ஆலய பங்குந் தந்தையால் குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள நிலைவாலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பொது மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மீனவர்களை உயிருடன் சிறிலங்கா இராணுவம் கண்டம் துண்டமாக வெட்டி கடலில் வீசிய இரத்தக் கறை படிந்த வரலாறு மண்டைதீவுப் படுகொலை.

1986 ஆம் ஆண்டு 31 மீனவர்கள் கடற்தொழிலின் போது இராணுவத்தினரால் படுகொலை கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வருடா வருடம் இவர்களின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறுகின்றது.

Related Posts