Ad Widget

யாழ் பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் பெறுமதியான நூல்கள் கையளிப்பு

donate+bookயாழ் பொது நூலகத்திற்கு ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தால் இன்று காலை 9.30 மணிக்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கப்பட்டன.

ஏசியா பவுண்டேசன் நிறுவனம் நூலகங்களை வலுப்படுத்தும் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பமாக யாழ் பொது நூலகத்துக்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள 284 புத்தகங்களை வழங்கியது.

இந் நிகழ்விற்கு வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் டேவிட் ஆனோல்ட், யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாநகரசபை ஆணையாளர் பிரணவநாதன் உட்பட ஏசியா பவுண்டேசன் நிறுவன அதிகாரிகள், யாழ் பொது நூலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts